/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்ஜினியரிங் பணி நடப்பதால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
/
இன்ஜினியரிங் பணி நடப்பதால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
இன்ஜினியரிங் பணி நடப்பதால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
இன்ஜினியரிங் பணி நடப்பதால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
ADDED : மே 19, 2025 11:55 PM
கோவை; இன்ஜினியரிங் பணிகள் நடக்க உள்ளதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குளித்தலை, பெட்டவாய்தலை ரயில்வே லெவல் கிராசிங்குகளில் இன்ஜினியரிங் பணிகள் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பாலக் காடு டவுன் - திருச்சி(16844) எக்ஸ்பிரஸ், இன்று, குளித்தலை வரை மட்டும் இயக்கப்படும். பணிகள் முடிந்த பின், குளித்தலையில் இருந்து முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
அதேபோல், திருச்சி - பாலக்காடு டவுன்(16843) எக்ஸ்பிரஸ் ரயில், இன்று குளித்தலையில் இருந்து புறப்படும். பணிகள் நிறைவடைந்த பின், குளித்தலையில் இருந்து முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக, இந்த ரயில் பாலக்காடு வரை இயக்கப்படும்.