/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அய்யப்பன் கோவிலில் அகண்ட நாம ஜபம்
/
அய்யப்பன் கோவிலில் அகண்ட நாம ஜபம்
ADDED : டிச 09, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : சூலுார் அடுத்த காங்கயம்பாளையத்தில் பிரசித்திபெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு, மண்டல மகர விளக்கு பூஜை நடந்து வருகிறது.
நேற்று, அதிகாலை, அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, அகண்ட நாம ஜபம் நடந்தது. காலை, 6:00 முதல் மாலை, 6:00 வரை நடந்த ஜபத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜையின் நிறைவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மதியம் கோவில் வளாகத்தில் நடந்த அன்னதானத்தில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.