sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் இன்று தேரோட்டம்

/

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் இன்று தேரோட்டம்

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் இன்று தேரோட்டம்

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் இன்று தேரோட்டம்


ADDED : ஏப் 09, 2025 10:49 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடக்கிறது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தென் கயிலாயம் எனப்படும், வெள்ளியங்கிரி மலைத்தொடரின் அடிவாரத்தில், பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.

இக்கோவிலில், ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, மஹா சிவராத்திரி, பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஆகிய விழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்தாண்டு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த 6ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும், காலையும், மாலையும், வேள்விச்சாலைகளும், திருவீதியுலாவும் நடந்தது.

மூன்றாம் நாளான நேற்று, காலை 6:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்கள் கொண்டு வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, வேள்வி பூஜை நடந்தது. இரவு 8:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஐந்தாம் நாளான இன்று மாலை, 4:00 மணிக்கு, பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.






      Dinamalar
      Follow us