sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வழிப்பறி சம்பவங்களை தடுக்க எட்டிமடையில் சோதனை சாவடி

/

வழிப்பறி சம்பவங்களை தடுக்க எட்டிமடையில் சோதனை சாவடி

வழிப்பறி சம்பவங்களை தடுக்க எட்டிமடையில் சோதனை சாவடி

வழிப்பறி சம்பவங்களை தடுக்க எட்டிமடையில் சோதனை சாவடி


ADDED : ஜூலை 15, 2025 07:03 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; எட்டிமடை - வாளையார் இடையேயான பகுதியில், சமீபகாலமாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், ஐந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன.

இதையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த எட்டிமடை - வாளையார் இடையே புதிதாக சோதனை சாவடி ஏற்படுத்த, மாவட்ட போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

எஸ்.பி., கார்த்திகேயன் கூறுகையில்,''எட்டிமடை - வாளையார் இடையேயான பாதை, 10 கி.மீ., நீளமுடையது. இதில் ஏற்கனவே வாளையார், வேலந்தாவளம் பகுதிகளில் இரு சோதனை சாவடிகள் உள்ளன. இங்கு போலீசார் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

எட்டிமடையில் புதிய சோதனை சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் பிரத்யேகமாக எஸ்.ஐ., தலைமையில் ரோந்து பணி மேற்கொள்ளப்படும். சோதனை சாவடிகளில் வாகனத் தணிக்கை நடத்தப்படும்.

தற்போது மாவட்டத்தில், 14 சோதனை சாவடிகள் உள்ளன. அவற்றில், 10 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுகின்றன. நான்கில் பழுதடைந்த கேமராக்களை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நிதி வழங்க உள்ளது.

மேலும், சில பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. வழிப்பறியை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us