sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குரங்குகளுக்கு சிக்கன் 'லெக் பீஸ்' எலும்பு! சுற்றுலா பயணியர் அட்ராசிட்டி

/

குரங்குகளுக்கு சிக்கன் 'லெக் பீஸ்' எலும்பு! சுற்றுலா பயணியர் அட்ராசிட்டி

குரங்குகளுக்கு சிக்கன் 'லெக் பீஸ்' எலும்பு! சுற்றுலா பயணியர் அட்ராசிட்டி

குரங்குகளுக்கு சிக்கன் 'லெக் பீஸ்' எலும்பு! சுற்றுலா பயணியர் அட்ராசிட்டி


ADDED : ஜன 29, 2024 11:38 PM

Google News

ADDED : ஜன 29, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், சுற்றுலா பயணியர், குரங்குகளுக்கு உணவுகளை வழங்குவதால் அவைகள் இயல்பை மறந்து விடும் அபாயம் உள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, டாப்சிலிப் உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில், மான், குரங்கு, யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

அதில், குரங்குகள் வனத்தில் கிடைக்கும் பழங்கள் போன்றவை உட்கொள்ளும் போது, அவற்றின் எச்சத்தால், செடிகள் முளைத்து இயற்கை பாதுகாக்கப்படுகிறது. செடிகள் முளைப்பது, மான் போன்ற விலங்குகளுக்கு உணவு எளிதில் கிடைத்தது.

இந்நிலையில், வனத்தில் போதிய உணவு கிடைக்காத நிலையில், வனத்தை விட்டு சமவெளிப்பகுதிக்கு வந்த குரங்குகளும், கிடைக்கும் உணவை உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன.

அதுவும், சுற்றுலா பயணியர் வருகை அதிகம் உள்ள ஆழியாறு அணை பகுதிகளில், கூட்டம் கூட்டமாக குரங்குகள் சுற்றித்திரிகின்றன.

இயற்கையாக கிடைக்கும் பழங்கள் உள்ளிட்டவை கிடைக்காத நிலையில், பசியை போக்க சுற்றுலா பயணியர் தரும் உணவை உட்கொள்ள துவங்கி விட்டன.

அவர்களும் குரங்குளை கண்ட 'குஷி'யில், தாங்கள் உட்கொள்ளும் உணவை பகிர்ந்து தருகின்றனர். பாஸ்ட்புட், கலப்படம் மிக்க உணவுகளை அவை உட்கொள்வதால், அவற்றுக்கு தீங்கு தான் ஏற்படும்.

பாலித்தீன் பைகளோடு எடுத்து வரும் தின்பண்டங்களை, அப்படியே குரங்குகள் சாப்பிடுகின்றன. பாலித்தீன் பைகளை விழுங்கும் குரங்குகளுக்கு நோய் உபாதைகள் ஏற்பட்டு இறக்கக்கூடிய அவல நிலையும் உள்ளது.

குரங்குகள் இயல்பு தன்மையை மறந்து, கிடைக்கும் உணவை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. மற்றவர் வருகைக்காக அவை காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

எனவே, சுற்றுலா பயணியர் குரங்களுக்கு துரித உணவுகளையோ, தாங்கள் சாப்பிடும் உணவுகளையோ வழங்க வேண்டாம் என, இயற்கை ஆர்வலர்களும், வனத்துறை அதிகாரிகளும் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us