/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வன அலுவலருக்கு முதல்வர் விருது
/
வன அலுவலருக்கு முதல்வர் விருது
ADDED : மார் 12, 2026 04:54 AM

கோவை: வனத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.
இதில், கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபுவுக்கு சிறந்த மாவட்ட வன அலுவலர் விருது வழங்கப்பட்டது.
கூடலூர் வனக் கோட்டத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றியபோது, மனித-வனவிலங்கு முரண்பாடுகளை குறைப்பதில் சிறப்பாக செயல்பட்டதற்காக இவ்விருது வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஜீன்பூல் கார்டனில் ரூ.6 கோடி மதிப்பில் ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு மையம், யானைகளைக் கண்காணிக்க 34 கண்காணிப்பு கேமராக்கள், தெர்மல் டிரோன் வசதி, 800 ஹெக்டர் பரப்பில் அந்நிய ஊடுருவல் மரங்கள் அகற்றம், 27 கி.மீ., நீளத்துக்கு யானைகளை தடுக்கும் அகழிகள் உள்ளிட்ட செயல்பாடுகளைப் பாராட்டி அவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், செயலர் சுப்ரியா சாகு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

