/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தை வேலாயுதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்
/
குழந்தை வேலாயுதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED : டிச 09, 2025 05:10 AM

தொண்டாமுத்தூர்: தொம்பிலிபாளையம், கூடுதுறை, நொய்யல் ஆற்றங்கரையையொட்டி, குழந்தை வேலாயுதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் துவங்கியது.
கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, சர்வதேவதா ஹோமம், தீபாராதனை, தீர்த்தக்குடம் எடுத்து வருதல், தீர்த்தகுடங்கள் வழிபாடு நடந்தது. மாலை, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை, 6:15 மணிக்கு, யாக சாலை மண்டபத்தில் இருந்து, கலசகுடங்கள் புறப்பாடு நடந்தது.
காலை, 7:00 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவனடியார்கள் தலைமையில், விமான கலசங்கள், குழந்தை வேலாயுதசுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வேலாயுதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

