ADDED : நவ 03, 2025 10:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கஸ்தூரி பாளையம் சிறுவர் பூங்கா புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிறு காளியம்மன் கோவில் வீதியில் ராமசாமி நன்கொடையாக கொடுத்த நிலத்தில், தனியார் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவுக்கு பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் விஷ்வபிரகாஷ் தலைமை வகித்தார்.
தனியார் நிறுவனர் அருள்சிங், பூங்காவை திறந்து வைத்தார். பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், அம்பிகா, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

