/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜெயமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா துவங்கியது
/
ஜெயமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா துவங்கியது
ஜெயமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா துவங்கியது
ஜெயமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா துவங்கியது
ADDED : மே 01, 2025 11:57 PM
கோவை; சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகரில் அமைந்துள்ள சக்தி விநாயகர், சித்தி விநாயகர் மற்றும் ஜெயமாரியம்மன் கோவிலில், நான்காம் ஆண்டு சித்திரை திருவிழா, 29ம் தேதி துவங்கியது; வரும், 9ம் தேதி நிறைவடைகிறது.
திருவிழாவில், இன்று முதல், 5ம் தேதி வரை, தினமும் மாலை, 6:30 மணிக்கு கம்பம் சுற்றி விளையாடப்படுகிறது.
4ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, திருவிளக்கு பூஜை நடக்கிறது. வரும் 6ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு, அம்மனின் சக்தி வேல் அழைத்து வருதலும், 5:30க்கு, சீர்வரிசை அழைத்து வருதலும், இரவு, 9:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கின்றன.
வரும் 7ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, குறிச்சி பொங்காளியம்மன் கோவிலில் இருந்து, சக்தி கரகம், தீர்த்தக்குடம், பால் குடம் எடுத்து வரப்படுகிறது. மதியம், 12:00க்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது.
8ம் தேதி, பிற்பகல், 3:00 மணிக்கு, அம்மன் வீதியுலா, மஞ்சள் நீராட்டும், 9ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, மறு பூஜை, 8:00 மணிக்கு, வானவேடிக்கை நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.