sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு விழா

/

சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு விழா

சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு விழா

சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு விழா


ADDED : ஆக 29, 2025 10:17 PM

Google News

ADDED : ஆக 29, 2025 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு விழா பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது.

சூலுார் அடுத்த குமாரபாளையத்தில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, 25வது ஆண்டு விழா நேற்று நடந்தது. பூண்டி, மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானி, கேரன மாநிலம் நெம்மாறை ஆகிய இடங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது.

நேற்று காலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் ஆண்டு விழா துவங்கியது. பல்வேறு வகையான மூலிகைகளை கொண்டு ஹோமம் நடந்தது. மதியம், ஸ்ரீ நாகமுனி, ராஜ நாக மகா முனிக்கு, தீர்த்தாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, சவுடேஸ்வரி அம்மனுக்கு, அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை, மேட்டுப்பாளையம், சோமனூர், பொள்ளாச்சி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us