ADDED : டிச 15, 2024 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதி, டி.இ.எல்.சி., அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தாளாளர் யோபுஞானையா தலைமை வகித்தார். தொடர்ந்து, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
விழாவில், நகராட்சி கவுன்சிலர் சாந்தலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உறுப்பினர்கள், முன்னாள் தலைமையாசிரியர், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பள்ளி தலைமையாசிரியர் அனிதாமேரி நன்றி கூறினார்.