sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிட்டி கிரைம்

/

சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்


ADDED : செப் 30, 2024 11:33 PM

Google News

ADDED : செப் 30, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூதாட்டம்; 22 பேர் கைது


சரவணம்பட்டி சின்ன வேடம்பட்டி பகுதியில், 2 வீடுகளில் சூதாட்டம் நடப்பதாக, சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சீட்டாட்டத்தில் ஈடுபட்ட, 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3.48 லட்சம், கார், பைக், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதேபோல் மற்றொரு வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, 18 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.52 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

--சிறுவன் உட்பட 2 பேர் கைது

வெள்ளலுார் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நாகூர் மொய்தீன், 37; புரோட்டா மாஸ்டர். நேற்று முன்தினம் இவர் வீட்டுக்கு செல்ல, காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த, 2 பேர் நாகூர் மொய்தீனிடம் மொபைல் போனை மிரட்டி பறித்து தப்பினர். நாகூர் மொய்தீன் புகாரின் படி, காட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து சின்னதடாகத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த மேகநாதன், 22, ஆகியோரை கைது செய்தனர்.

பணம் பறித்தவர் கைது


தெலுங்குபாளையம் சுப்பிரமணிய உடையார் வீதியை சேர்ந்தவர் மனோஜ், 24; தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம், அப்பகுதியில் உள்ள காலி இடத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், மனோஜை கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1400 மற்றும் மொபைல் போனை பறித்து தப்பி சென்றார். மனோஜ் புகாரின் படி, செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து, தெலுங்குபாளையம் சிவசக்தி நகரை சேர்ந்த ரஞ்சித் குரு, 39, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us