/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயிருக்கு போராடிய நாகபாம்பு மீட்பு
/
உயிருக்கு போராடிய நாகபாம்பு மீட்பு
ADDED : ஏப் 21, 2025 09:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி';பொள்ளாச்சி அருகே, வேடசந்துார் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவரது தோட்டத்தில், 20 அடி கிணற்றில் பாம்பு ஒன்று, தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்தார். இதையடுத்து, பாம்பு பிடி வீரர் சுரேஷ்சுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற சுரேஷ், நீளமான குச்சி வாயிலாக பாம்பை மீட்க முயற்சித்தார். பாம்பை வெளியே எடுத்து பிடிப்பதற்குள், தோட்டத்தில் இருந்த பொந்துக்குள் பாம்பு புகுந்தது. மீட்கப்பட்ட பாம்பு, 6 அடி நீளம் கொண்ட 'கம்பரிசி' நாகம் என்பதும் தெரிந்தது.