sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தென்னையும் வாழையும் யானையால் துவம்சம்

/

தென்னையும் வாழையும் யானையால் துவம்சம்

தென்னையும் வாழையும் யானையால் துவம்சம்

தென்னையும் வாழையும் யானையால் துவம்சம்


ADDED : ஜூலை 13, 2025 05:49 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே காட்டு யானையால் தென்னங்கன்றுகள், வாழை, பாக்கு மரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.

கோவை வடக்கு மலையோர கிராமங்களில், காட்டு விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளின் வரவை கட்டுப்படுத்த, வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், முழுமையாக தடுத்து நிறுத்த இயலவில்லை.

குறிப்பாக, காட்டு யானைகளின் வரவால், மலையோர கிராமங்களில் வேளாண்மை அதிகமாக பாதித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு, தாளியூர் பழனிசாமி தோட்டத்தில் புகுந்த யானை, அங்கிருந்த தென்னை மரங்களையும், தென்னங்கன்றுகளையும், பாக்கு மரங்களையும் முட்டி தள்ளி கீழே சாய்த்தது. இதே போல அதே பகுதியில் வாழை மரங்களையும், கீழே தள்ளி சேதப்படுத்தியது.

இது குறித்து, தடாகம் வட்டார விவசாயிகள் கூறுகையில், 'காட்டு யானைகளின் வருகைக்கு அஞ்சி, கரும்பு பயிரிட இப்பகுதி விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். தொடர்ந்து தென்னங்கன்றுகளையும், வாழைகளையும், பாக்கு மரங்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்துவதால், அவற்றையும் பயிரிட முடியாத சூழல் ஏற்படலாம். இப்பிரச்னைக்கு வனத்துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us