/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுாரில், 24ம் தேதி தேங்காய் ஏலம் துவக்கம்
/
சூலுாரில், 24ம் தேதி தேங்காய் ஏலம் துவக்கம்
ADDED : ஜூலை 20, 2025 10:44 PM
சூலுார்; சூலுார் திருச்சி ரோட்டில், கொங்கு மகால் அருகில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. விளை பொருட்கள் இருப்பு வைத்து பாதுகாக்கும் வசதி உள்ளது. இங்கு வாரந்தோறும் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்க உள்ளது.
இதுகுறித்து, சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வாணி அறிக்கை :
சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வரும், 24 ம்தேதி வியாழக்கிழமை தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக நடக்கும் ஏலத்தில், சூலுார் வட்டார விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்று பயன் அடையலாம்.
ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள், ஆதார் அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முகப்பு பக்க நகல் கொண்டு வரவேண்டும். மேலும், விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை, இ - நாம் திட்டத்தின் வாயிலாக விற்று, விளை பொருட்களுக்கு உரிய விலையை பெற்று பயன் அடையலாம். மேலும் விபரங்களுக்கு, 98946 87827 என்ற எண்ணில் கண்காணிப்பாளரையும், 99769 63449 என்ற எண்ணில் மேற்பார்வையாளரையும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.