sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சூலுாரில், 24ம் தேதி தேங்காய் ஏலம் துவக்கம்

/

சூலுாரில், 24ம் தேதி தேங்காய் ஏலம் துவக்கம்

சூலுாரில், 24ம் தேதி தேங்காய் ஏலம் துவக்கம்

சூலுாரில், 24ம் தேதி தேங்காய் ஏலம் துவக்கம்


ADDED : ஜூலை 20, 2025 10:44 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; சூலுார் திருச்சி ரோட்டில், கொங்கு மகால் அருகில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. விளை பொருட்கள் இருப்பு வைத்து பாதுகாக்கும் வசதி உள்ளது. இங்கு வாரந்தோறும் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்க உள்ளது.

இதுகுறித்து, சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வாணி அறிக்கை :

சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வரும், 24 ம்தேதி வியாழக்கிழமை தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக நடக்கும் ஏலத்தில், சூலுார் வட்டார விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்று பயன் அடையலாம்.

ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள், ஆதார் அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முகப்பு பக்க நகல் கொண்டு வரவேண்டும். மேலும், விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை, இ - நாம் திட்டத்தின் வாயிலாக விற்று, விளை பொருட்களுக்கு உரிய விலையை பெற்று பயன் அடையலாம். மேலும் விபரங்களுக்கு, 98946 87827 என்ற எண்ணில் கண்காணிப்பாளரையும், 99769 63449 என்ற எண்ணில் மேற்பார்வையாளரையும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us