/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மடத்துக்குளத்தில் தேங்காய் ஏலம்
/
மடத்துக்குளத்தில் தேங்காய் ஏலம்
ADDED : ஜூலை 14, 2025 08:16 PM
மடத்துக்குளம்; மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோ ரூ.68க்கு விற்பனையானது.
மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், தேங்காய் ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 6 விவசாயிகள். 334 கிலோ எடையுள்ள தேங்காய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த ஏலத்தில், ஆறு வியாபாரிகள் பங்கேற்றனர். அதிகபட்சமாக, கிலோ ரூ.68க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.58க்கும் விற்பனையானது. வரும், 21ம் தேதி முதல், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடக்கும்.
விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறும். மேலும் விபரங்களுக்கு, 94871 59363; 87780 95875 ஆகிய எண்கணில் தொடர்பு கொள்ளலாம், திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், கண்காணிப்பாளர் மேரிஹில்டா தெரிவித்துள்ளனர்.