/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்
/
தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்
ADDED : பிப் 02, 2024 10:58 PM

ஆனைமலை;ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் மற்றும் வாழைத்தார் ஏலம் நடந்தது.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 'இ - நாம்' திட்டம் வாயிலாக, மட்டை உரித்த தேங்காய் மற்றும் வாழைத்தார் ஏலம் நடந்தது. கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார்.
தேங்காய் ஏலத்தில், தேங்காய் மூட்டைகள் வந்தன. அதில், அதிகபட்சமாக, கிலோ, 27 ரூபாய்க்கு விற்றது.
வாழைத்தார் ஏலத்தில் மொத்தம், 159 வாழைத்தார்கள் வந்தன. கிலோவுக்கு நேந்திரன் - 18 ரூபாய், கதளி - 32, செவ்வாழை - 52, கற்பூரவள்ளி - 25, ரஸ்தாளி - 25 ரூபாய்க்கு விற்றது. ஐந்து விவசாயிகள், நான்கு வியாபாரிகள் பங்கேற்றனர். மொத்தம், 37,585 ரூபாய் மதிப்பிலான வாழைத்தார்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.

