sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மண் கொள்ளை நடந்த இடத்தில் கோவை கலெக்டர் ஆய்வு

/

மண் கொள்ளை நடந்த இடத்தில் கோவை கலெக்டர் ஆய்வு

மண் கொள்ளை நடந்த இடத்தில் கோவை கலெக்டர் ஆய்வு

மண் கொள்ளை நடந்த இடத்தில் கோவை கலெக்டர் ஆய்வு

2


ADDED : செப் 23, 2024 02:19 AM

Google News

ADDED : செப் 23, 2024 02:19 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மண் கொள்ளையை தடுக்க கோரி, சிவா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகள், மனுவில் குறிப்பிட்டுள்ள கிராமங்களுக்கு கலெக்டர், எஸ்.பி., மற்றும் கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்து, மண் திருடுவோரை கைது செய்ய வேண்டும்; இயந்திரங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டனர்.

இதன் எதிரொலியாக, தொண்டாமுத்துார் வட்டார பகுதிகளில் உள்ள கரடிமடை, ஆலாந்துறை அடுத்த மூங்கில் மடை குட்டை மூலக்காடு, வெள்ளெருக்கம்பாளையம், வேட்டைக்காரன் கோவில் செல்லும் வழியில் உள்ள பட்டா நிலங்களில், சட்டவிரோதமாக மண் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களில், கலெக்டர் கிராந்திகுமார் நேற்று ஆய்வு செய்தார்.

முறைகேடு செய்தவர்கள் மீது வழக்கு பதியவும், மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவும், அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கவும், உத்தரவிட்டார்.

பேரூர் தாசில்தார் ரமேஷ், கனிமவளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us