sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கொடி நாள் வசூலில் கோவை மாநகராட்சி முதலிடம்

/

கொடி நாள் வசூலில் கோவை மாநகராட்சி முதலிடம்

கொடி நாள் வசூலில் கோவை மாநகராட்சி முதலிடம்

கொடி நாள் வசூலில் கோவை மாநகராட்சி முதலிடம்

1


ADDED : ஜன 27, 2025 12:36 AM

Google News

ADDED : ஜன 27, 2025 12:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கொடி நாள் வசூலில் மாநில அளவில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முதலிடம் பெற்றதால், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனுக்கு, தமிழக கவர்னர் ரவி, கேடயம் வழங்கி, பாராட்டினார்.

நமது நாட்டில் முப்படைகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு உதவும் வகையில், அரசு துறை அலுவலகங்கள் மூலமாக கொடி நாள் நிதி வசூலிக்கப்படும்.

அத்தொகையில், நமது நாட்டுக்காக சேவையாற்றியோர் குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

அரசு அலுவலகங்களுக்கு பணி நிமித்தமாக வரும் பொதுமக்களிடம் கொடி நாள் நிதி வசூலித்து, சமர்ப்பிக்கப்படும். அவ்வகையில், இரு ஆண்டுகளாக கோவை மாநகராட்சி, இலக்கை கடந்து நிதி வசூலித்துக் கொடுத்திருக்கிறது. 2024ல், 76 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்தது.

இது, மாநில அளவில் முதலிடம். இதற்கு கவுரவிக்கும் வகையில், சென்னையில் தமிழக கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனுக்கு, தமிழக கவர்னர் ரவி, பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி, கவுரவித்தார்.

கேடயம் பெற்ற மாநகராட்சி கமிஷனருக்கு சக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us