sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காதல் ஜோடியை கொன்றவருக்கு துாக்கு கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

/

காதல் ஜோடியை கொன்றவருக்கு துாக்கு கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

காதல் ஜோடியை கொன்றவருக்கு துாக்கு கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

காதல் ஜோடியை கொன்றவருக்கு துாக்கு கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு


ADDED : ஜன 30, 2025 02:30 AM

Google News

ADDED : ஜன 30, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு துாக்கு தண்டனை அளித்து, கோவை எஸ்.சி., - எஸ்.டி., சிறப்பு கோர்ட், நேற்று தீர்ப்பு அளித்தது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், வெள்ளிபாளையம் ரோடு, சீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி என்பவரின் இளைய மகன் கனகராஜ், 22, சுமை துாக்கும் தொழிலாளி.

எதிர்ப்பு


இவரும், வெள்ளிபாளையம் ரோட்டிலுள்ள நகராட்சி துப்புரவு தொழிலாளர் குடியிருப்பில் வசிக்கும் அமுதா மகள் வர்ஷினிபிரியா, 16, என்பவரும் காதலித்து வந்தனர். கனகராஜின் காதலுக்கு, அவரது அண்ணன் வினோத்குமார், 28, எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் காதலர்கள் இருவரும், வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து, வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.

இதையறிந்த அமுதா, மகளை பார்க்க அவர் வசித்த பகுதிக்கு, 2019, ஜூன் 25ல் சென்றார். அப்போது, அங்கு வந்த வினோத்குமார், தம்பி கனகராஜை அரிவாளால் வெட்டினார். தடுக்கச் சென்ற, வர்ஷினிபிரியாவையும் வெட்டினார்.

சம்பவ இடத்தில் கனகராஜ் உயிரிழந்தார். படுகாயமடைந்த வர்ஷினிபிரியா, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து, வினோத்குமார் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கந்தவேல், அய்யப்பன், சின்னராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, கோவை எஸ்.சி., - எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து, கடந்த 23ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட வினோத்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவரை குற்றவாளி என்றும், மற்ற மூவரும் விடுதலை செய்யப்படுவதாகவும், நீதிபதி அறிவித்தார். தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது.

அரிதினும் அரிது


நீதிபதி விவேகானந்தன் அளித்த தீர்ப்பு விபரம்:

இந்த வழக்கின் குற்றவாளியான வினோத்குமார், அவரது தம்பி வேறு ஜாதியை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால், கொலை செயலில் ஈடுபட்டுள்ளார். ஜாதிக்காக அந்த பெண்ணின் தாய் முன்பே, கொடூரமான முறையில் கொலை நடந்துள்ளதால், அரிதினும் அரிதான வழக்காக கருதப்படுகிறது.

எனவே குற்றவாளிக்கு, துாக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி விவேகானந்தன், தீர்ப்பில் குறிப்பிட்டார்.

தீர்ப்பு குறித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய் அமுதா கூறுகையில், ''குற்றவாளிக்கு துாக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். என் மகளை போல, யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது. இந்த தீர்ப்பின் வாயிலாக என்னை போன்ற, மற்ற பெண்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us