sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

/

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

அரசு பள்ளியில் முப்பெரும் விழா


ADDED : ஜூலை 25, 2011 02:01 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : கோவை மாவட்ட அளவில் முத்திரை பதித்த சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு பரிசு வழங்கப்பட்டது.பொள்ளாச்சி அடுத்த சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்குவிப்பு பரிசளிப்பு விழா, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, பள்ளிக்கு தளவாட பொருட்கள் வழங்கிய எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு பாராட்டு விழா என, முப்பெரும் விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் லோகநாயகி வரவேற்றார்.

பொள்ளாச்சி எம்.எல்.ஏ., முத்துக்கருப்பணசாமி தலைமை வகித்தார். பொள்ளாச்சி எம்.பி., சுகுமார், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் ஆகியோர் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி போதித்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினர். பாடவாரியாக முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் பேசினார்.










      Dinamalar
      Follow us