sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு உதவி கேட்டு மாற்றுத்திறனாளி கோரிக்கை

/

அரசு உதவி கேட்டு மாற்றுத்திறனாளி கோரிக்கை

அரசு உதவி கேட்டு மாற்றுத்திறனாளி கோரிக்கை

அரசு உதவி கேட்டு மாற்றுத்திறனாளி கோரிக்கை


ADDED : ஆக 09, 2011 02:54 AM

Google News

ADDED : ஆக 09, 2011 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், அரசு உதவி வேண்டி மாற்றுத்திறனாளி ஒருவர் மனு கொடுத்தார்.பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் மீனா பிரியாதர்ஷினி தலைமையில் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது.

கூட்டம் துவங்கியதும், மாற்றுத்திறனாளி ஒருவர் தவழ்ந்து வந்து மனு கொடுத்தார்.'தனக்கு ஒரு கால் இல்லாததால், இலவசமாக மூன்று சக்கர சைக்கிள் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்க வேண்டும். இதுவரை மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கவில்லை' என்று மனு கொடுத்தார். மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் உறுதியளித்தார்.அதையடுத்து, பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் காலனியில் வசிக்கும் திருநங்கைகள் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு கொடுத்தனர். முகாமில், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை கேட்டு அதிகளவில் மனுக்கள் வந்திருந்தன.








      Dinamalar
      Follow us