/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை கோட்ட அளவில்தபால் குறை தீர்ப்பு கூட்டம்
/
கோவை கோட்ட அளவில்தபால் குறை தீர்ப்பு கூட்டம்
ADDED : செப் 11, 2025 10:08 PM
கோவை; கோவை கோட்ட அளவிலான தபால் குறை தீர்ப்பு கூட்டம், 29ம் தேதி, காலை 11 மணிக்கு, கோவை தலைமை தபால் நிலையத்தில் நடக்கிறது.
வாடிக்கையாளர்கள், கோவை கோட்டத்துக்கு உட்பட்ட புகார்களை, வாடிக்கையாளர் சேவை மையம், கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கோவை கோட்டம், குட்ஷெட் தெரு, கோவை -641001' என்ற முகவரிக்கு, 26க்குள் அனுப்ப வேண்டும்.
பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடர்பான புகார்களில் தபால் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், அனுப்புனர் மற்றும் பெறுனர் முழு முகவரி, தபால் பதிவு எண் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
அஞ்சலக சேமிப்பு கணக்கு, காப்பீடு தொடர்பான புகார்களில், சேமிப்பு கணக்கு எண், காப்பீட்டு எண், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர், காப்பீட்டாளர் பெயர் மற்றும் முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர், பணப்பிடித்தம் தொடர்பான தகவல்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
காகிதத்தின் மேலுறையில், 'தபால் குறை தீர்ப்பு கூட்ட புகார்' என எழுதப்பட்டிருக்க வேண்டும். தபால் குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மேற்கண்ட தேதியில் உரிய நேரத்தில் பங்கேற்க வேண்டும், என, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.