/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ சங்க மாநாட்டில் கோவை டாக்டருக்கு விருது
/
மருத்துவ சங்க மாநாட்டில் கோவை டாக்டருக்கு விருது
ADDED : டிச 18, 2024 09:02 PM

கோவை; இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில மாநாடு, சேலத்தில் நடந்தது. இம்மாநாட்டில் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையத்தின் சர்க்கரை நோய் தலைமை மருத்துவர் பாலமுருகனுக்கு, அவரது சங்கம் சார்ந்த செயல்பாடுகள், சேவையை கவுரவிக்கும் வகையில், ஐ.எம்.ஏ.,- ஏ.எம்.எஸ்., பெல்லோஷிப் விருது வழங்கப்பட்டது. இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் அப்துல் ஹாசன் இவ்விருதை வழங்கினார்.
மாநிலம் முழுவதிலிருந்து, சுமார் 1000 டாக்டர்கள் பங்கேற்றனர். இதில், கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையத்தின் தலைமை மருத்துவர் பாலமுருகன், ஆரம்ப கட்டத்தில் உள்ள சர்க்கரை நோயை திரும்ப குணமாக்க முடியுமா என்பதை மையமாக கொண்டு, 'டயாபடிக் ரிவர்சல்' ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை பிரிவு இணை செயலாளராகவும், சர்க்கரை நோய் விழிப்புணர்வு செயல்பாடுகளுக்கான சர்க்கரை விழிப்புணர்வு கமிட்டி தலைவராகவும், டாக்டர் பாலமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மருத்துவ சங்க மாநில புதிய தலைவர் டாக்டர் செங்குட்டுவன், தமிழ்நாடு கிளை செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

