/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க கோவைக்கு ரூ.1.49 கோடி மானியம்
/
சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க கோவைக்கு ரூ.1.49 கோடி மானியம்
சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க கோவைக்கு ரூ.1.49 கோடி மானியம்
சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க கோவைக்கு ரூ.1.49 கோடி மானியம்
ADDED : ஜூன் 27, 2025 11:23 PM
கோவை; கோவை மாவட்டத்தில் சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க, பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.1.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்டத்திற்கு, தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களுக்காக, ரூ.1.49 கோடி மதிப்பில், விவசாயிகளுக்கு இடுபொருட்கள், மானியம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சோளம் சாகுபடியில் கோ32, கே12 ரகங்களில், தொழில்நுட்ப செயல்விளக்கத் திடல் 2.5 ஏக்கரில் அமைக்க, ரூ.6,000 மானியம் வழங்கப்படுகிறது.
உயர்விளைச்சல் ரகங்களை உற்பத்தி செய்யவும், சோளம், கம்பு விதைகளை அதிகம் பயன்படுத்தவும் ஊக்குவிக்க, கிலோவுக்கு ரூ.30 கூடுதலாக வழங்கப்படுகிறது.
சிறுதானிய நுண்ணூட்டக்கலவை, 12.5 கிலோ ரூ.675க்கு வழங்கப்பட உள்ளது. உயிர் உரங்கள், பூச்சிமேலாண்மை, தார்பாலின்கள், இலைவழி உரத்தெளிப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
மாவட்டத்தின், 12 வட்டாரங்களிலும் இம்மானியங்கள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்களது வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை அல்லது தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்க ஆலோசகரை, 99449 77561 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.