sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'குப்பை மாநகரமாக மாறி வருகிறது கோவை மாநகர்'

/

'குப்பை மாநகரமாக மாறி வருகிறது கோவை மாநகர்'

'குப்பை மாநகரமாக மாறி வருகிறது கோவை மாநகர்'

'குப்பை மாநகரமாக மாறி வருகிறது கோவை மாநகர்'


ADDED : ஜன 29, 2024 12:57 AM

Google News

ADDED : ஜன 29, 2024 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:''கோவை நகர் குப்பை நகராக மாறிவருகிறது,'' என்று, பா.ஜ.,எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை செட்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை, மக்களுக்கு அர்ப்பணித்த வானதி சீனிவாசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை தெற்கு தொகுதி குறிஞ்சி கார்டன் பகுதி மக்கள், சாலை வசதி இன்றி சிரமத்திற்குள்ளாகி வந்தனர். எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் குப்பை சரியாக அகற்றாதது, மிகப்பெரும் குறையாக உள்ளது. கோவை மாநகரம் தூய்மையான நகர பட்டியலில் இருந்தது. தற்பொழுது குப்பை நகராக மாறிக்கொண்டுள்ளது.

கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. மாநகராட்சி மேயர், தூய்மையான நகராக கோவையை மாற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக முதலீடுகளை ஈர்க்கும் இடமாக கோவை மாறிவருகிறது. ஆகவே, உடனடியாக மாநகராட்சி நிர்வாகம், குப்பையை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்ரீராமர் பிராண பிரதிஷ்டைக்குப் பின், அயோத்திக்கு செல்ல பல்லாயிரக்கணக்கான மக்கள் கேட்டுக் கொண்டுள்ளதால், இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

அயோத்தி செல்லும் பக்தர்கள், சிறப்பான தரிசனம் மேற்கொள்ள அனைத்து வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு, வானதிசீனிவாசன் கூறினார்.

உருவாக்க வேண்டும்'

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற பெரும்பாலான நிறுவனங்கள், ஏற்கனவே ஒப்பந்தம் போட்ட நிறுவனங்களே. அந்நிறுவனங்களே திரும்பவும் புதிய ஒப்பந்தம் செய்துள்ளன.தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும். அதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். அதற்கேற்ப தொழிற்கல்வியில், மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்,'' என்றார் வானதி.








      Dinamalar
      Follow us