sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை சிறை கைதி மர்ம மரணம் ; சிறை போலீசார் 4 பேர் 'சஸ்பெண்ட்'

/

கோவை சிறை கைதி மர்ம மரணம் ; சிறை போலீசார் 4 பேர் 'சஸ்பெண்ட்'

கோவை சிறை கைதி மர்ம மரணம் ; சிறை போலீசார் 4 பேர் 'சஸ்பெண்ட்'

கோவை சிறை கைதி மர்ம மரணம் ; சிறை போலீசார் 4 பேர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஜன 29, 2025 11:38 PM

Google News

ADDED : ஜன 29, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மத்திய சிறையில், கைதி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், சிறை போலீசார் நான்கு பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி பால் பண்ணை வீதியை சேர்ந்தவர் பவுல்ராஜ் மகன் ஏசுதாஸ், 33. இவர், 2012ம் ஆண்டு திருப்பூரில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில், 2016 ஆண்டு மார்ச் மாதம் அடைக்கப்பட்டார்.

அவர், கடந்த 27ம் தேதி சிறை வளாகத்தில் உள்ள தொழிற்சாலையில், வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார். அப்போது அவர், அங்குள்ள கழிவறைக்குள் மயங்கிய நிலையில் இருந்ததை சிறை போலீசார் பார்த்தனர்.

தகவல் அறிந்து வந்த உயர் அதிகாரிகள், அவரை சிறை மருத்துவரிடம் கொண்டு சென்றனர். சிறை மருத்துவரின் அறிவுறுத்தலின்படி, ஏசுதாசை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

அதில், அவர் கழுத்து எழும்பு உடைந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்தது. இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது.

ரேஸ்கோர்ஸ் போலீசார் சந்தேக மரணம் என, வழக்குப்பதிவு செய்தனர். நான்கு தனிப்படைகள் அமைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, துணை சிறை அலுவலர் மனோரஞ்சிதம், உதவி சிறை அலுவலர் விஜயராஜ், முதல்நிலை தலைமை காவலர் பாபுராஜ், முதல் நிலை காவலர் தினேஷ் ஆகியோரை, சஸ்பெண்ட் செய்து, சிறை எஸ்.பி., செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us