/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
/
கோவை வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
ADDED : செப் 08, 2025 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மதுரையை சேர்ந்த வக்கீல் பகலவன், 4ம் தேதி நடை பயிற்சி சென்றபோது, கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்தும், தப்பிய குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழுவினர், ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்தனர்.
அதன்படி, கோவை வக்கீல் சங்கம் சார்பில், நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. 3,500க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஆஜராகாததால், அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.