/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
7ம்தேதி ஐகோர்ட் முற்றுகைக்கு கோவை வக்கீல்கள் ஆயத்தம்
/
7ம்தேதி ஐகோர்ட் முற்றுகைக்கு கோவை வக்கீல்கள் ஆயத்தம்
7ம்தேதி ஐகோர்ட் முற்றுகைக்கு கோவை வக்கீல்கள் ஆயத்தம்
7ம்தேதி ஐகோர்ட் முற்றுகைக்கு கோவை வக்கீல்கள் ஆயத்தம்
ADDED : டிச 27, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, டிச.27-
வழக்குகளை இ-பைலிங் முறையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதை கண்டித்து, 7 ம் தேதி சென்னை ஐகோர்ட் முன் வக்கீல்கள் முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த பிரச்னைக்காக, வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம், நகல் எரிப்புஆகியவற்றை தொடர்ந்து,சென்னை ஐகோர்ட் வளாகத்தை முற்றுகையிட, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டுக்குழு முடிவு செய்தது.
முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க கோவை வக்கீல் சங்கம் சார்பில் 400 பேரை பஸ்களில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

