நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை : ஆனைமலை வாழைகொம்பு நாகூரை சேர்ந்தவர் கண்ணப்பன்(47).
இவரது மனைவி
காளியம்மாள்(45). இருவரும் கூலித்தொழிலாளிகள். இரண்டு குழந்தைகளும்
உள்ளனர். கடந்த 28ம் தேதி இரவு வீட்டில் உள்ள விறகு அடுப்பில் சமையல்
செய்து கொண்டிருந்த போது புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது.
கோவை அரசு மருத்துவமனையில் காளியம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஆனைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.