sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீடு வீடாக இலவச பரிசு மழை

/

வீடு வீடாக இலவச பரிசு மழை

வீடு வீடாக இலவச பரிசு மழை

வீடு வீடாக இலவச பரிசு மழை


ADDED : செப் 14, 2011 01:39 AM

Google News

ADDED : செப் 14, 2011 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்:உள்ளாட்சித் தேர்தலே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பிளாஸ்டிக் கூடை, ரேஷன் கார்டு கவர், மின் கட்டண அட்டை கவர் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டதால், அன்னூர் மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. போட்டியிட விரும்பும் பிரமுகர்கள் பலர் வீடு, வீடாக ஆதரவு திரட்டி வருகின்றனர்.அன்னூர் பேரூராட்சியில் அங்கப்பமுதலியார் காலனி பகுதி அடங்கிய 11வது வார்டில் வீடுவீடாக ஒரு அடி உயரமுள்ள பிளாஸ்டிக் கூடை, ரேஷன் கார்டுக்கான கவர், மின் கட்டண அட்டைக்கான கவர் ஆகிய மூன்று பொருள் இலவசமாக வழங்கப்பட்டன.

அந்த வார்டுக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்.வீதி, எக்சேஞ்ச் சந்து, சுப்பையா 'லே-அவுட்' உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் இரண்டு நாட்களாக வீடுவீடாக மூன்று பொருட்களும் இலவசமாக வினியோகிக்கப்பட்டன. வார்டில் உள்ள 460 வீடுகளில் பெரும்பாலான வீடுகளுக்கு பொருட்கள் கொடுத்துள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், வாக்காளர்களுக்கு இலவசமாக பொருள் வழங்கினால், நடத்தை விதிமுறை மீறல் என்பதால் முன்னதாகவே இந்த பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.மற்ற வார்டுகளில் என்ன பொருள் கொடுக்கலாம் என, போட்டியிட உத்தேசித்துள்ளவர்கள் யோசித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us