sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

/

தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி


ADDED : செப் 15, 2011 11:40 PM

Google News

ADDED : செப் 15, 2011 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய எஸ்.எஸ்.ஏ., சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 'டயஸ்' விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது குறித்து 'எஜூசாட்' முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் புள்ளி விபரங்களை சேகரிக்கும் வகையில் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி குறித்த அனைத்து விபரங்களும் பெறப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் தெற்கு ஒன்றிய எஸ்.எஸ்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.இதில், கல்வியியல் செயற்கை கோள் மூலம் 'கியான் தர்ஷன்-2' மூலம் தேசிய அளவில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.

கல்வி மாவட்டத்தை சேர்ந்த 61 துவக்கப்பள்ளி, 22 நடுநிலைப்பள்ளிகள், நான்கு உயர்நிலைப்பள்ளி, ஒன்பது மேல்நிலைப்பள்ளிகள், 35 மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் என 131 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.பயிற்சியில், 'பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள படிவங்களை ஆசிரியர்களை பிழையின்றி கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதன்மூலம், அனைத்து பள்ளிகள் குறித்த புள்ளி விபரங்களையும் சேகரிக்க முடியும்' என்றனர். பயிற்சி முகாமில், தெற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் வெள்ளிங்கிரி, உதவி துவக்க கல்வி அலுவலர் மாரியப்பன், ஆசிரிய பயிற்றுனர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us