sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை போலீசாருக்கு சென்னையில் பாராட்டு

/

கோவை போலீசாருக்கு சென்னையில் பாராட்டு

கோவை போலீசாருக்கு சென்னையில் பாராட்டு

கோவை போலீசாருக்கு சென்னையில் பாராட்டு


ADDED : ஆக 18, 2025 10:24 PM

Google News

ADDED : ஆக 18, 2025 10:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மாநில அளவில் நடந்த பணித்திறனாய்வு போட்டிகளில் பதக்கங்களை பெற்ற, கோவை போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.

மாநில அளவிலான, தமிழ்நாடு காவல் பணித்திறனாய்வு போட்டிகள் சென்னையில் ஜூலை, 19ம் தேதி முதல் கடந்த, 4ம் தேதி வரை நடந்தன. மொத்தம், 23 தங்கம், 22 வெள்ளி, 27 வெண்கலம் என, 72 பதக்கங்கள், 14 சுழற் கேடயம் வழங்கப்பட்டது.

புகைப்பட நிகழ்வில், கோவை மாநகர போலீஸ் முதுநிலை புகைப்பட நிபுணர் பிரசாத் ஒரு தங்கப்பதக்கமும், ஒரு சாம்பியன்ஷிப் சுழற்கேடயமும் வென்றார்.

வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்கச் செய்தல் பிரிவில், பெண் போலீஸ் முருகேஷ்வரி, ஒரு தங்கப்பதக்கம் வென்றார். துப்பறியும் நாய் படைப்பிரிவில், ஏட்டு மதன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

பதக்கங்களை வென்ற போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் பாராட்டு தெரிவித்தார். போதைப்பொருட்களை கண்டறியும், மோப்ப நாய் டைகருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us