sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் பெங்களூருவில் கோவை வீரர்கள் சாதனை

/

 தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் பெங்களூருவில் கோவை வீரர்கள் சாதனை

 தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் பெங்களூருவில் கோவை வீரர்கள் சாதனை

 தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் பெங்களூருவில் கோவை வீரர்கள் சாதனை


ADDED : டிச 30, 2025 05:08 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில், கோவையை சேர்ந்த ஈக்வைன் ட்ரீம்ஸ் குதிரையேற்ற பயிற்சி மைய மாணவர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர்.

பெங்களூருவில் நடைபெற்ற தென் மண்டலத்திற்கான இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பல மாநிலங்களில் இருந்தும் 250 குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த பயிற்சி மையம் சார்பில் 10 மாணவர்கள் பங்கேற்று 6 தங்கம்; 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். குறிப்பாக, ரோஹன், ஹாசினி, யஜத் சாய் மற்றும் தீப் குக்ரேதி ஆகியோர் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.

பயிற்சி மையத்தின் தலைமை செயல் அதிகாரி சக்தி பாலாஜி கூறுகையில், ''கடந்த 9 ஆண்டுகளாக எங்கள் மையத்தின் மாணவர்கள் 18 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில், 'ஷோ ஜம்பிங்' மற்றும் 'டிரஸாஜ்' ஆகிய இரண்டு பிரிவுகளிலும் மாணவர்கள் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

குதிரையேற்றப் போட்டிகளில் சிறந்து விளங்குவதிலும், பதக்கங்களை வெல்வதிலும் தேசிய அளவில் கோவை முதல் 3 இடங்களுக்குள் உள்ளது. தொடர் பயிற்சி மற்றும் ஆர்வத்தின் காரணமாகவே மாணவர்கள் இந்த உயரத்தை எட்டியுள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us