sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை மேற்கையும், கிழக்கையும் இணைக்கணும்! தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்

/

கோவை மேற்கையும், கிழக்கையும் இணைக்கணும்! தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்

கோவை மேற்கையும், கிழக்கையும் இணைக்கணும்! தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்

கோவை மேற்கையும், கிழக்கையும் இணைக்கணும்! தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்


ADDED : ஜன 27, 2025 12:51 AM

Google News

ADDED : ஜன 27, 2025 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மேற்குப் பகுதியையும் கிழக்குப் பகுதியையும் இணைக்கும் வகையில் சாலை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என, இந்திய தொழில் வர்த்தக சபை வலியுறுத்தியுள்ளது.

கோவை மாநகரம் வேகமாக விரிவடைந்து வரும் அளவுக்கு அதன் உள்கட்டமைப்பு வசதிகள் வேகமாக வளர்வதில்லை. தொழில்துறையின் போக்குவரத்து வசதிகளை நிறைவேற்ற முடியாத அளவுக்குத்தான் சாலைகள் உள்ளன.

கோவையில் பெருகி வரும் மக்கள்தொகை, விரிவடையும் குடியிருப்புகள், விரிவடையும் நகர எல்லை, மக்கள் அடர்த்தி, வாகனப் பெருக்கத்துக்கேற்ற சாலைகள், குடிநீர் வசதி, வடிகால் வசதி, விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ, ரயில்நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து, பாதாள சாக்கடை என பல்வேறு கோணங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது.

சாலைக்கட்டமைப்பு ஓரளவு இருப்பினும், எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை என்பதே நிதர்சனம். பாதாள சாக்கடை என்ற பெயரில் ஆண்டுக்கணக்காக சாலைகள் மிக மோசமாக பேணப்படுகின்றன.

இந்நிலையில், துரிதமாக மாஸ்டர் பிளான் வடிவமைக்கப்பட்டு, அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, கோவை மேற்குப்பகுதியையும், கிழக்குப் பகுதியையும் இணைக்கும் பாலங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ராஜேஷ் லுந்த் கூறியதாவது:

கோவையில் அனைத்துக் கோணங்களிலும் சமூக உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம். தற்போது கோவை மேற்குப் பகுதியையும் கிழக்குப் பகுதியையும் இரு பாலங்கள்தான் இணைக்கின்றன. ஒன்று அவிநாசி ரோடு மேம்பாலம், 2வது வடகோவை மேம்பாலம்.

இதில், அவிநாசி ரோடு மேம்பாலம் ஏறக்குறைய 50 ஆண்டுகள் மிகப்பிரமாதமாக கோவை மக்களுக்கு சேவை செய்துள்ளது. அன்றைய காலகட்டத்திலேயே எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.

தற்போது இது இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. சமீபத்தில், ஒரு காஸ் டேங்கர் லாரி அந்தப் பாலத்தில் விபத்துக்குள்ளானபோது, அரை நாள் முழுக்க அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.

கோவையின் கிழக்குப்பகுதியில் அதிக அளவு மருத்துவமனைகள் உள்ள நிலையில், மேற்குப் பகுதியில் இருந்து அவசர மருத்துவத் தேவைக்காக வருவதாக இருந்தால்,'கோல்டன் அவர்' எனப்படும் உயிர்காக்கும் பொன்னான நேரம் வீணடிக்கப்பட்டிருக்கும்.

தற்போது கோவையில் ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அடுத்த பல பத்தாண்டுகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, அவிநாசி ரோடு மேம்பாலத்தை விரிவுபடுத்த வேண்டும். அல்லது புதிதாக ஒன்று நிர்மாணிக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட சில பாலங்களையே நம்பியிருக்கும் நிலை மாற்றப்பட்டு, வேறு சில மாற்று நடவடிக்கைகள் அவசியம். இதற்கான முன்னெடுப்பை மாவட்ட நிர்வாகம் விரைந்து எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும் போர்க்கால அடிப்படையில் இதற்கான நடவடிக்கைகளைத் துவக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us