sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வசூல் பணம் ரூ.35 லட்சத்துடன் கோவை இளைஞர் 'எஸ்கேப்'

/

வசூல் பணம் ரூ.35 லட்சத்துடன் கோவை இளைஞர் 'எஸ்கேப்'

வசூல் பணம் ரூ.35 லட்சத்துடன் கோவை இளைஞர் 'எஸ்கேப்'

வசூல் பணம் ரூ.35 லட்சத்துடன் கோவை இளைஞர் 'எஸ்கேப்'


ADDED : ஜூலை 06, 2025 03:11 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: விற்பனையாளராக பணியாற்றிய நிறுவனத்துக்குச் சேர வேண்டிய ரூ.35 லட்சம் பணத்தை மோசடி செய்து தப்பிய ஊழியரை போலீசார் தேடுகின்றனர்.

கோவை, ராமநாதபுரம், பரி நகரை சேர்ந்தவர் சங்கர், 43; 'பிரிட்டானியா பிஸ்கட்' விநியோகிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நிறுவனத்தில் முருகன் என்பவர் விற்பனையாளராக பணியாற்றினார். நகரில் உள்ள பல்வேறு கடைகளுக்கு முருகன் வாயிலாக பிஸ்கட் சப்ளை செய்யப்பட்டது.

சில மாதங்களாக விற்பனை செய்யப்பட்ட பிஸ்கட்களுக்கான தொகை சங்கருக்கு வரவில்லை. கடைக்காரர்களிடம் அவர் விசாரித்தார். அவர்கள் முருகனிடம் பணம் கொடுத்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து முருகனிடம் விசாரித்ததில் இருந்து, அவர் வேலைக்கு வரவில்லை.

சந்தேகம் அடைந்த சங்கர், நிறுவனத்தின் வரவு - செலவுகளை ஆய்வு செய்தபோது, ஆறு மாதங்களில் ரூ.35 லட்சம் பணம் கணக்கில் வராதது தெரியவந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். தலைமறைவாகியுள்ள முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us