sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை விவகாரம்; கல்லூரி நிர்வாகம் விளக்கம்

/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை விவகாரம்; கல்லூரி நிர்வாகம் விளக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை விவகாரம்; கல்லூரி நிர்வாகம் விளக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை விவகாரம்; கல்லூரி நிர்வாகம் விளக்கம்


ADDED : ஏப் 22, 2025 07:13 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; காரமடை அருகே நடந்த பாலியல் புகாருக்கு, இன்ஜினியரிங் கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கோவை மாவட்டம், காரமடை அருகே ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லூரியில் பணியாற்றி வந்த பெண்ணுக்கு, அதே கல்லூரி சி.இ.ஓ., பிரசன்னன்,39. பாலியல் தொல்லை தந்ததாக பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது குறித்து, காரமடை ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லூரி மனிதவள மேம்பாட்டு மேலாளர் மனோகரன் கூறுகையில்,''குறிப்பிட்ட பெண்ணின் கணவர் கல்லுாரியில் 'ஏசி' பராமரிப்பு பணியை செய்து வந்தார். சமீப காலமாக அவருக்கு பணி ஒதுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண், அவரின் கணவர் ஆகியோர் காரமடை டீச்சர்ஸ் காலனியில் உள்ள பிரசன்னன் வீட்டு கார், ஸ்கூட்டர், கதவை அடித்து உடைத்தனர். இது தொடர்பாக காரமடை போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் கோபமடைந்த பெண், அவரின் கணவர், பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் போலீசில் பிரசன்னன் மீது பொய் புகார் அளித்தனர். குறிப்பிட்ட நாளில் பாலியல் தொல்லை சம்பவங்கள் நடைபெறவில்லை என்பதற்கான 'சிசிடிவி' பதிவுகள் உள்ளன'' என்றார்.






      Dinamalar
      Follow us