sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விவசாய கருவிக்கு மானியம் தராதநிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

/

விவசாய கருவிக்கு மானியம் தராதநிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

விவசாய கருவிக்கு மானியம் தராதநிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

விவசாய கருவிக்கு மானியம் தராதநிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு


ADDED : மே 22, 2025 11:40 PM

Google News

ADDED : மே 22, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : விவசாய கருவிக்கு அரசு மானியம் பெற்று தராததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் சந்திரா லட்சுமிபதி. விவசாயம் செய்து வந்த இவர், கோவை, நஞ்சப்பா ரோட்டிலுள்ள விவசாயி கருவிகள் விற்பனை கடையில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு, பவர் டில்லர் மெஷின் வாங்கினார். மெஷின் வாங்கும் போது, அரசு மானியமாக 1.05 லட்சம் ரூபாய் பெற்று தருவதாக தெரிவித்துள்ளனர். மானியம் பெறுவதற்கான அனைத்து ஆவணங்களையும் கொடுத்தார்.ஆனால், பல மாதங்களாகியும் மானியம் பெற்றுதரவில்லை.

இதனால் மன உளைச்சல் அடைந்த சந்திரா லட்சுமிபதி இழப்பீடு வழங்க கோரி, வக்கீல் ஆர்.மோகனகிருஷ்ணன் வாயிலாக, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ''விவசாய கருவிகள் விற்பனை நிறுவனம் உறுதி அளித்தபடி மானியம் பெற்று தராமல் சேவைகுறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு மானிய இழப்பு தொகை 1.05 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய்,வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us