sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வரி செலுத்தலைனா 'ஜப்தி'; நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

/

வரி செலுத்தலைனா 'ஜப்தி'; நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

வரி செலுத்தலைனா 'ஜப்தி'; நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

வரி செலுத்தலைனா 'ஜப்தி'; நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை


ADDED : மார் 21, 2025 10:11 PM

Google News

ADDED : மார் 21, 2025 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை உடனடியாக செலுத்தாவிட்டால், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வால்பாறை நகராட்சியில், வரி வசூல் செய்வதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும், 65 சதவீதம் பேர் மட்டுமே வரி செலுத்தியுள்ளனர். சொத்துவரி, கடை வாடகை, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்கள் செலுத்தப்படவில்லை.

இது குறித்து, நகராட்சி கமிஷனர் ரகுராமன் கூறியதாவது:

வால்பாறை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில்வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட வரியினங்களை, நகராட்சி அலுவலகத்தில் இம்மாத இறுதிக்குள் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

தவறும் பட்சத்தில், கடைகள் பூட்டி 'சீல்' வைப்பதோடு, குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். மேலும் நீதிமன்ற நடவடிக்கை வாயிலாக, ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினை உடனடியாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us