/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து காங்., அஞ்சலி
/
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து காங்., அஞ்சலி
ADDED : டிச 07, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; அம்பேத்கரின், 68வது நினைவு நாளையொட்டி, நேற்று நாடு முழுவதும் அவரது உருவச்சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில், கோவை எப்.சி.ஐ., குடோனில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு காங்., ஊடகத்துறை தேசிய ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
உடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் சவுந்தர குமார் உட்பட, பலர் கலந்து கொண்டனர். அதேபோல, ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க மாநில பொது செயலாளர் கோவை செல்வம் தலைமையில், ஐ.என்.டி.யு.சி., நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.