sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ரோட்டை மறித்து கட்டுமான பொருட்கள் குவிப்பு 

/

 ரோட்டை மறித்து கட்டுமான பொருட்கள் குவிப்பு 

 ரோட்டை மறித்து கட்டுமான பொருட்கள் குவிப்பு 

 ரோட்டை மறித்து கட்டுமான பொருட்கள் குவிப்பு 


ADDED : டிச 11, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, மற்றும் சுற்றுப்பகுதி உள்ளாட்சிகளில், குடியிருப்பு வீடுகளின் கட்டுமானம் அதிகரித்து வருகிறது. இதனால், எந்தவொரு ரோட்டிலும் வாகனங்களின் இயக்கம் இருந்து வருகிறது. அவ்வகையில், குடியிருப்பு பகுதிகளிலும் போக்குவரத்து வசதியாக தார் சாலை அமைக்கப்படுகிறது.

ஆனால், பல பகுதிகளில், புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக கொண்டு வரப்படும் மணல், ஜல்லி, செங்கல், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், ரோடுகளிலேயே கொட்டப்பட்டு, இருப்பு வைக்கப்படுகின்றன.

கட்டுமானத்தின் போது, கல், மணல், துாசி ஆகியவை மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க கட்டுமான பகுதியில் வலை அல்லது தடுக்கு அமைக்க வேண்டும். கட்டுமான பொருட்களை ரோடுகளில் போடக்கூடாது; பயன்படுத்தும் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பயன்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

ஆனால், பலரும், கட்டுமானம் முடிய பல மாதங்களாகும் என்று தெரிந்தும், ரோடுகளிலேயே கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கின்றனர். புதிய கட்டடங்களுக்கு அனுமதி கொடுக்கும் உள்ளாட்சி அதிகாரிகள், ரோடுகளை ஆக்கிரமிக்கும் கட்டுமான பொருட்களில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us