sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுமானம் விறுவிறு

/

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுமானம் விறுவிறு

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுமானம் விறுவிறு

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுமானம் விறுவிறு


ADDED : ஜன 16, 2025 05:50 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : வனபத்ரகாளியம்மன் கோவிலில், 5.30 கோடி ரூபாய் செலவில், ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்றது மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடைகள் வாடகைக்கு ஏலம் விடுவதன் வாயிலாகவும், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை வாயிலாகவும், ஆண்டுக்கு பல கோடி ரூபாய், கோவிலுக்கு வருவாய் கிடைக்கிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள், ராஜகோபுரம் கட்டும் படி, அரசுக்கும், கோவில் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அரசு ஏழு நிலை ராஜ கோபுரம் கட்ட, அனுமதி வழங்கியதை அடுத்து, பல ஆண்டுகளுக்கு முன் பணிகள் துவங்கின. கல்காரப் பணிகள் முடிந்த நிலையில், பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகள் நின்றன.

தற்போது, ஐந்து கோடியே, 30 லட்சம் ரூபாய் செலவில் மீண்டும் கட்டுமான பணிகள் துவங்கி, துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஏழு நிலையில், இரண்டாம் நிலைக்கு கான்கிரீட் போட, அதற்கான பணிகள் நடைபெறுகின்றன. கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி பணிகளை துரிதமாக செய்யும்படி, ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தி வருகிறார். இதையடுத்து கோபுரம் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.






      Dinamalar
      Follow us