/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.டி.நாயுடுவுக்கு சிலை கட்டுமான பணி துவக்கம்
/
ஜி.டி.நாயுடுவுக்கு சிலை கட்டுமான பணி துவக்கம்
ADDED : பிப் 18, 2026 06:42 AM

கோவை: 'அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு நினைவை போற்றும் வகையில், அவருக்கு கோவையில் சிலை நிறுவப்படும்' என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் சமீபத்தில் அறிவித்தார்.
வ.உ.சி. மைதானத்தில் உள்ள வ.உ.சி. சிலை அருகே, ஜி.டி.நாயுடு சிலை நிறுவ இடம் தேர்வு செய்யப்பட்டது. 50 அடி அகலம், 45 அடி நீளமுள்ள இடத்தை மாநகராட்சி ஒதுக்கிக் கொடுத்தது.
பொதுப்பணித்துறை தரப்பில், 7 அடி உயரத்துக்கு சிலை தயார் செய்யப்பட்டது. மாநகராட்சி இடம் கொடுத்ததை தொடர்ந்து, சிலை நிறுவுவதற்கான பணியை அத்துறையினர் துவக்கினர்.
பொதுப்பணித்துறையினரிடம் கேட்ட போது, 'சிலை தயாராக இருக்கிறது. கட்டுமான பணியை துவக்கி விட்டோம். முதல்வர் ஸ்டாலின் கோவை வரும்போது திறந்து வைப்பார்' என்றனர்.

