ADDED : ஏப் 26, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார், ; பீகார் மாநிலம், தன் காபாத்தைச் சேர்ந்த லால் பகதூர் சாஸ்திரி மகன் நாகமணி குமார், 30. லேபர் காண்ட்ராக்டராக உள்ளார். அதே கம்பெனியில் பீகார் மாநிலம் ஹர் பரனாமாவை சேர்ந்த வால்மீகி கேவட், 38. என்பவரும் லேபர் காண்ட்ராக்டராக உள்ளார்.
இருவருக்கும் இடையே நேற்று காலை வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நாகமணி குமாரை, வால்மீகி மரக்கட்டையால் தாக்கினார். இதில் அவர் காயமடைந்தார். அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து வால்மீகியை கைது செய்தனர்.

