/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமையல் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை
/
சமையல் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை
ADDED : டிச 27, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்: நெகமம், சேரிபாளையத்தை சேர்ந்தவர் கணேசன், 42, சமையல் பணி செய்து வந்தார். அண்ணன் வீட்டில் தங்கி இருந்த இவருக்கு திருமணமாகவில்லை. மேலும், மது பழக்கத்துக்கு அடிமையான அவர், வீட்டில் தனிமையில் இருந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு, தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
உறவினர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

