/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமையல் உதவியாளர் மாற்றம் மாணவர்கள் மயக்கம் எதிரொலி சமையல் உதவியாளர் மாற்றம்
/
சமையல் உதவியாளர் மாற்றம் மாணவர்கள் மயக்கம் எதிரொலி சமையல் உதவியாளர் மாற்றம்
சமையல் உதவியாளர் மாற்றம் மாணவர்கள் மயக்கம் எதிரொலி சமையல் உதவியாளர் மாற்றம்
சமையல் உதவியாளர் மாற்றம் மாணவர்கள் மயக்கம் எதிரொலி சமையல் உதவியாளர் மாற்றம்
ADDED : ஜன 08, 2026 05:19 AM
சூலூர்: சுல்தான்பேட்டை அடுத்த வதம்பச்சேரி ஊராட்சி ஓடக்கல்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், கடந்த , 5ம் தேதி சத்துணவு சாப்பிட்ட, 100 மாணவ, மாணவியரில், 33 பேருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை முடிந்து அனைவரும் வீடு திரும்பினர்.
இந்நிலையில், பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளியில் விசாரணை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, சத்துணவு சமைத்த சமையல் உதவியாளர் மாலதி, தற்காலிகமாக வதம்பச்சேரி அரசு தொடக்கப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்பள்ளியில் பணிபுரியும் பாக்கியராணி ஓடக்கல்பாளையத்துக்கு மாற்றப்பட் டுள்ளார்.

