sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ.181 கோடிக்கு கடன் பத்திரம் வெளியிட மாநகராட்சி முடிவு

/

ரூ.181 கோடிக்கு கடன் பத்திரம் வெளியிட மாநகராட்சி முடிவு

ரூ.181 கோடிக்கு கடன் பத்திரம் வெளியிட மாநகராட்சி முடிவு

ரூ.181 கோடிக்கு கடன் பத்திரம் வெளியிட மாநகராட்சி முடிவு


ADDED : ஜூன் 05, 2025 01:22 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்த, கடன் பத்திரங்கள் வெளியிட்டு, 181.09 கோடி ரூபாய் திரட்டுவதற்கு, தமிழக அரசின் அனுமதிக்கு, மாநகராட்சி காத்திருக்கிறது.

கோவை மாநகராட்சியின் மின் தேவையை சமாளிக்க, சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் அமைக்க, 150 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்கள் வெளியிட்டு, நிதி திரட்டுவதற்கு, கடந்தாண்டு ஜூலையில் நடந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசின் ஒப்புதலுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. கடன் பத்திரங்கள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாதென தமிழக அரசு தெரிவித்தது.

இத்திட்டத்தை மாற்றி, செம்மொழி பூங்கா, குறிச்சி - குனியமுத்துார் பாதாள சாக்கடை திட்டத்துக்கான மாநகராட்சி பங்களிப்புக்கு ரூ.150.88 கோடிக்கு கடன் பத்திரங்கள் வெளியிட்டு, நிதி திரட்ட அனுமதி அளிக்கப்பட்டது.

இத்திட்டத்தில், செம்மொழி பூங்காவுக்கு தேவையான நிதி எடுக்க முடியாது. குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என, தமிழக அரசு தெளிவுபடுத்தியது.

அதனால், செம்மொழி பூங்கா திட்டத்தை விட்டு, குறிச்சி - குனியமுத்துார் பாதாள சாக்கடை திட்டம், வடவள்ளி - வீரகேரளம் - கவுண்டம்பாளையம் - துடியலுார் பாதாள சாக்கடை திட்டம், பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம், 24 மணி நேர குடிநீர் திட்டங்களுக்கு நிதி திரட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களுக்கு மாநகராட்சி பங்களிப்பு தொகையாக ரூ.181.09 கோடிக்கு கடன் பத்திரம் வெளியிட்டு நிதி திரட்ட, மாமன்றத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, கருத்துரு அனுப்பிய மாநகராட்சி, தமிழக அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.

பயன்படுத்த நிபந்தனை'

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''கடன் பத்திரங்கள் வெளியிட்டு திரட்டும் நிதியை, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மன்ற தீர்மானத்தை அரசுக்கு அனுப்பியுள்ளோம்; இன்னும், 10 நாட்களில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததில் இருந்து, 45 நாட்களுக்குள் கடன் பத்திரம் வெளியிடப்படும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us