sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ.1,500 லஞ்சம் பெற்ற வழக்கு; மாநகராட்சி ஊழியருக்கு சிறை

/

ரூ.1,500 லஞ்சம் பெற்ற வழக்கு; மாநகராட்சி ஊழியருக்கு சிறை

ரூ.1,500 லஞ்சம் பெற்ற வழக்கு; மாநகராட்சி ஊழியருக்கு சிறை

ரூ.1,500 லஞ்சம் பெற்ற வழக்கு; மாநகராட்சி ஊழியருக்கு சிறை


ADDED : அக் 02, 2025 12:50 AM

Google News

ADDED : அக் 02, 2025 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,; லஞ்சம் பெற்ற வழக்கில், கோவை மாநகராட்சி ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை, சவுரிபாளையத்தை சேர்ந்த கார்த்திக் பிரபு என்பவருக்கு, செட்டிபாளையத்தில் வீட்டு மனை உள்ளது. காலியிட வரி செலுத்த, கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்தார். காலியிட வரி புத்தகம் பெறவதற்காக, தெற்கு மண்டல இளநிலை உதவியாளராக பணியாற்றிய, சுந்தராபுரம் காந்தி நகரை சேர்ந்த கோகிலாமணியை,61 சந்தித்தார்.

அவர் காலியிட வரி நிர்ணயித்து புத்தகம் கொடுப்பதற்கு, 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டார். கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் கார்த்திக் பிரபு புகார் அளித்தார்.

போலீசார் அறிவுரைப்படி, 2014, டிச., 21ல், அலுவலகத்துக்குச் சென்று பணத்தை கொடுத்தார். லஞ்ச பணம், 1,500 ரூபாயை, கோகிலாமணி வாங்கியபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

விசாரித்த நீதிபதி ஷர்மிளா, குற்றம் சாட்டப்பட்ட கோகிலாமணிக்கு, ஓராண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us