sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகராட்சி அலுவலகம் முற்றுகை; துாய்மை பணியாளர்கள் கைது

/

மாநகராட்சி அலுவலகம் முற்றுகை; துாய்மை பணியாளர்கள் கைது

மாநகராட்சி அலுவலகம் முற்றுகை; துாய்மை பணியாளர்கள் கைது

மாநகராட்சி அலுவலகம் முற்றுகை; துாய்மை பணியாளர்கள் கைது


ADDED : அக் 19, 2024 06:35 AM

Google News

ADDED : அக் 19, 2024 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும்; கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் வழங்க வேண்டுமென, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை கமிஷனர் சிவக்குமார், பேச்சு நடத்தியும் அவர்கள் உடன்படவில்லை.

நேற்று காலை, 8:00 மணிக்கு மாநகராட்சி அலுவலகம் முன் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் மீண்டும் கூடினர். நுழைவாயில் மூடப்பட்டு இருந்ததால், நடைபாதையில் வரிசையாக அமர்ந்தனர். பதட்டமான சூழல் ஏற்பட்டதால், போலீசார் வரவழைக்கப்பட்டு, 90 பெண்கள் உட்பட, 151 பணியாளர்கள் கைது செய்யப்பட்டு, நல்லாயன் மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர். மாநகராட்சி அலுவலகத்துக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us