sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஊழல் கண்காணிப்பு வாரம்; விழிப்புணர்வு நடைபயணம்

/

ஊழல் கண்காணிப்பு வாரம்; விழிப்புணர்வு நடைபயணம்

ஊழல் கண்காணிப்பு வாரம்; விழிப்புணர்வு நடைபயணம்

ஊழல் கண்காணிப்பு வாரம்; விழிப்புணர்வு நடைபயணம்


ADDED : அக் 24, 2024 11:37 PM

Google News

ADDED : அக் 24, 2024 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஊழல் மற்றும் கண்காணிப்பு வாரம் கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நடைபயணம், கோவையில் நேற்று நடந்தது.

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, பொதுமக்கள் மத்தியில் ஊழல் மற்றும் கண்காணிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் இணைந்து, விழிப்புணர்வு நடைபயணத்தை நேற்று நடத்தியது.

கோவை ரேஸ்கோர்ஸில் துவங்கிய நடைபயணத்தை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் முதன்மை மண்டல மேலாளர் சந்தீப், கொடியசைத்து துவக்கி வைத்தார். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கண்காணிப்பு அதிகாரி முரளிகிருஷ்ணன், ஓரியண்டல் இன்சூரன்ஸ் கண்காணிப்பு அதிகாரி மதுசூதனன், முதன்மை மண்டல அதிகாரி சுரேஷ், தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கண்காணிப்பு அதிகாரி அருள் முருகன் உட்பட 120க்கும் மேற்பட்டோர், இதில் பங்கேற்றனர்.

ஊழலின் தீமைகளை விளக்கும் பதாகைகளை பேரணியில் பங்கேற்றவர்கள் ஏந்தி சென்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us